Friday, December 3, 2010

மௌனம் ஒன்று பெண் கண் இமைக்கும் ஓசை- அவள்
உதட்டு ஓரத்து மின்னல் சிரிப்பின் இசை
கேளாதவர்க்கு- மௌனம் புரியாது !

காற்றில் அசையும் மர இலைகளின் நாதம்
நதிமேல் வீசும் காற்றின் கீதம்
புரியாதவர்க்கு-மௌனம் புரியாது !

காதலரின் உயிர் உடல் கலக்கும் போது
எழும் மூச்சுப்பாட்டு கேளடவர்க்கு
மௌனத்தின் இனிமை தெரியாது.
மௌனம் இரண்டு
புயலுக்கு முன் வரும் மௌனம் பயங்கரம்
இரு உறவுக்கு இடையே மௌனம் கொடூரம்
சாவினால் வரும் பிரிவின் மௌனம் சூனியம்
முதலாவது பொய்யெனில் -தோழி
இரண்டாவது சத்தியமா ?
இல்லை இரண்டாவது பொய்யெனில் முதலாவது
நித்தியமா  !  சொல் தோழி.

No comments:

Post a Comment

Blog Archive