கராத்தே கிட் (KARATE KID)
என் நான்கு வயது பேரன் SCHOOLலில் இருந்து அப்போதுதான் வீடு திரும்பியிருந்தான். இருவரும் மதிய
உணவருந்தி TV பார்த்துக்கொண்டிருந்தோம். டிவியில் கராத்தே
பற்றி ஒரு சேதி வந்துகொண்டிருந்தது. அதை பார்த்த என் பேரன் ‘
கராத்தே கிட்’ CD போட வற்புறுத்தினான்.
மனமில்லாமல் வீட்டில் இருந்த CDயை தேடிபோட்டேன். என்னையும்
கட்டாயப்படுத்தி CD பார்க்க உட்கார வைத்தான். அவன் மதியம்
தூங்கும் நேரம், CD பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்
என்று அவன் பாட்டி சொல்லை காதில் போட்டுக்கொள்ளாமல் இருவரும் சினிமா
பார்த்துக்கொண்டிருந்தோம். இந்த சினிமாவை நான் பல வருடங்களுக்கு முன் தியேட்டரில்
பார்த்திருந்தேன்.
அமெரிக்காவிலிருந்து சீனவிற்க்கு வேலைக்காக தன் பத்து வயது
மகனுடன் வரும் ஒரு நீக்ரோ single mother.
அங்கே ஒரு சீனா சிறுமியின் நட்பு அந்த சிறுவனுக்கு கிடைக்கிறது. அதை
பொறுக்காத கராத்தே கற்ற இவன் வயதை சார்ந்த சில சிறுவர்கள் இவனை அடிக்க, அவர்களை எதிர்க்க இச்சிறுவனும் கராத்தே கற்க ஆசைபட்டு, அங்கு வசிக்கும் கட்டடத்தை பாராமரிக்கும் , கராத்தே
கற்ற தொழிலாளியாக நடிக்கும் ஜாக்கி சென்னிடம் கராத்தே கற்க சேருகிறான். எந்த ஒரு
வித்யையின் முதல் பாடமான கட்டுப்பாட்டை கற்பிப்பதிலிருந்து தொடங்கி – கராத்தேயின்
பல நுற்பங்களை கற்று கொடுப்பது – ஒரு அழகானா மலை மேல் இருக்கும் கராத்தே பள்ளிக்கு
அழைத்து சென்று – அங்கு கராத்தே கற்கும் மாணவரின் சிரமம் ,
சிரத்தைகளை நன்றாக காட்டியுள்ளார்கள்.
கராத்தே போட்டியில் பங்கேற்று காலில் அடிபட்டு
படுத்திருக்கும் பொழுது ,போட்டியிட
வேண்டாம் என்று குரு சொல்ல – போட்டியில் பங்கேற்க பிடிவாதம் காட்டும் பொழுது ,” ஏன் இந்த பிடிவாதம் ?” என்று குரு கேட்க,“ நான் பயப்படுகிறேன் – இனி பயப்படாமல் இருக்க போட்டியிடுகிறேன்” என்கின்ற பதில் எவ்வளவு சரியானதல்லவா ? நாம் பயப்படும் சங்கதிகளை
எதிர்கொள்வதுதான் நாம் பயத்திலிருந்து வெளியேற ஒரே
வழியல்லவா ? போட்டியிட்டு வென்ற பின் – எதிராளியே இவனது துணிவை பாராட்டி
தன் கையால் பரிசளிப்பது , பிற
போட்டியாளர்கள் தலை வணங்கி இவனுக்கும், குருவுக்கும் மரியாதை செலுத்துவது – அம்மக்களின்
கண்ணியத்தையும் , கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கிறது.
நான் சினிமாவின் நுணுக்கங்களில் மூழ்கியிருந்ததால் , என் மடிமேல்
பேரன் தூங்கிபோனதை கவனிக்கவில்லை. அறுவது வயதை தாண்டி
விட்டேன் – சிறு சிறு சங்கதிகளிலும் சந்தோஷம் தேட
முற்படுகிறேன்.
திரும்பவும் குழந்தையாகிறேனோ ?
No comments:
Post a Comment