Tuesday, September 18, 2012


தர்மசாலவிலிருந்து ஒரு குட்டி கடிதம்.................                            23.6.3023

“ பனி படர்ந்த குட்டி திபெத்

 சீனா வசமானன்று

 நிறைய பறவைகள்

 கடவுள் நாமம் பாட மறுத்தன “ –

 “ நீலு “ என்கின்ற லங்கேஷ் எழுதிய இந்த கன்னட கவிதை தர்மசாலவை பார்த்த பொழுது நினைவுக்கு வந்தது. வடக்கு இமய மலையில் , கடல் மட்டத்திலிருந்து 15000 அடி உயரத்தில்

இருக்கும் ஒரு சமவெளி பிரதேசம் இந்த குட்டி திபெத். Yuan ( 1279 -1368) Qing சந்ததிகளால்

ஆளாப்பட்டு , 1717இல் சீனா ஆக்ரமித்து தன் வசப்படுத்திக்கொண்டது. 1911இல் கிளர்ச்சி ஏற்பட்டு , 1913இல் தலாய்லாமா திபெத்தை சுதந்திர நாடாக அறிவித்தார். மீண்டும் 1950இல் சீனா போரிட்டு வசமாக்கிக்கொண்டது. தற்போதைய தலாய்லாமாவான “ Tenzin Gyatso” 1959இல் தலைமறைவாகி இந்தியா வந்து அடைக்கலம் புகுந்த பொழுது , இந்தியா அரசு திபெத் மக்களுக்காக இமாசல பிரதேசத்தில் உள்ள தர்மசாலவை கொடுத்தது. 1966 -76 களில் திபெத்தில் நடந்த கலாச்சார கிளர்ச்சியினால் அங்குள்ள அநேக புத்த ஆலயங்களையும் ,புத்த மடங்களையும் சீனரால் அழிக்கப்பட்டது. சீனரால் புத்த மத அனுயாயிகள் இம்சை , கொலைக்கு உள்ளானர்கள். திபெத் தற்பொழுது சீனா வசம் உள்ளது. இப்படி அகதிகளாக வந்த திபெத் மக்கள் தர்மசாலவை தங்கள் ஆட்சி மையம் ஆக்கிக்கொண்டு இந்தியாவின் மாநிலங்களான இமாசல் பிரதேசம் , அருணாசலம் , கர்நாடக , மகராஷ்ட்ரா சிக்கிம்களில் தங்கள் முகாம்களை அமைத்துக்கொண்டனர். இந்த ஐம்பத்தி மூன்று ஆண்டுகள் தங்களுக்கென்று ஒரு நாடு இல்லாமல் நாடோடி வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.  நமது அரசாங்கம் கொடுத்த கல் , முள்ளான வறண்ட பூமியை தம் உழைப்பால் நல்ல விளைச்சல் நிலங்களாக மாற்றி , நம் நாட்டுடன் , கலாச்சாரத்துடன் , மக்களுடன் இணைந்து வாழும் மாசற்ற மக்கள் இந்த திபெத்தியர்கள்.

அறுபது லட்சம் ஜூக்கள் ஹிட்லரால் கொல்லப்பட்டு , தமக்கென்று ஒரு பிடி மண் கூட

இல்லாமல் , உலகத்தின் எல்லா மூலைகளிலும் அண்டி வாழ்ந்து , 1948இல் தமக்கென்று

கிடைத்த இஸ்ரேல் என்ற பாலைவனத்தை பெற்று, விரோதிகளாலே சூழற்பட்டிருந்தாலும் ,

தமக்கென்று ஒரு நாட்டை கட்டி , சுயமரியாதையுடனும் வாழும் ஜூயிஷ் மக்களுக்கு குரல் கொடுத்த பல நாடுகள் , உலகிற்கே “ பெரியண்ணன் ”என்று பெருமை பீத்திக்கொள்ளும் அமெரிக்க ஏன் திபெத் விஷயத்தில் மௌனம் சாதிக்கிறது. இந்தியா ஏன் கண்மூடிக்கொண்டிருக்கிறது ? சீன ட்ராகன் (Dragon ) கண்டு உலகிற்கு பயமோ ! குறிப்பாக இந்தியாவிற்க்கு ?

 

பறவைகள் கடவுள் வாழ்த்து பாடும் நாளை எதிர் நோக்கி மாசற்ற ஒரு சமுதாயமே காத்துக்கொண்டிருக்கிறது. என்னதான் நாம் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து

சகல வசதிகளுடனும் , கௌரவத்துடனும் பார்த்து கொண்டாலும் அவர்களின் மண்ணில் புரண்டு விளையாடி , அவர்களின் நதியான ப்ரஹ்மபுத்ராவில் நீந்தும் சுகம் கொடுக்க

முடியுமா ? இருக்கும் இடத்தில் இருந்தால்தானே எல்லோருக்கும் சுகம், நிம்மதி.

அந்த நாள் விரைவில் வர நாம் ஏதாவது செய்யவேண்டுமல்லவா ?

 

தர்மசால போய் வாருங்கள் அப்போது என் எண்ணத்தை நீங்களும் ஆமோதிப்பீர்கள்.

( இதை பகிர்ந்துகொள்ளுங்கள்)

 

 

.

 

No comments:

Post a Comment

Blog Archive