தர்மசாலவிலிருந்து ஒரு
குட்டி கடிதம்................. 23.6.3023
“ பனி படர்ந்த குட்டி திபெத்
சீனா வசமானன்று
நிறைய பறவைகள்
கடவுள் நாமம் பாட
மறுத்தன “ –
“ நீலு “ என்கின்ற
லங்கேஷ் எழுதிய இந்த கன்னட கவிதை தர்மசாலவை பார்த்த பொழுது நினைவுக்கு வந்தது.
வடக்கு இமய மலையில் , கடல்
மட்டத்திலிருந்து 15000 அடி உயரத்தில்
இருக்கும் ஒரு சமவெளி பிரதேசம் இந்த குட்டி திபெத். Yuan ( 1279 -1368) Qing சந்ததிகளால்
ஆளாப்பட்டு , 1717இல் சீனா ஆக்ரமித்து தன் வசப்படுத்திக்கொண்டது. 1911இல் கிளர்ச்சி
ஏற்பட்டு , 1913இல் தலாய்லாமா திபெத்தை சுதந்திர நாடாக
அறிவித்தார். மீண்டும் 1950இல் சீனா போரிட்டு வசமாக்கிக்கொண்டது. தற்போதைய
தலாய்லாமாவான “ Tenzin Gyatso” 1959இல் தலைமறைவாகி
இந்தியா வந்து அடைக்கலம் புகுந்த பொழுது , இந்தியா அரசு திபெத் மக்களுக்காக இமாசல பிரதேசத்தில் உள்ள தர்மசாலவை கொடுத்தது.
1966 -76 களில் திபெத்தில் நடந்த கலாச்சார கிளர்ச்சியினால் அங்குள்ள அநேக புத்த
ஆலயங்களையும் ,புத்த மடங்களையும் சீனரால் அழிக்கப்பட்டது. சீனரால்
புத்த மத அனுயாயிகள் இம்சை , கொலைக்கு உள்ளானர்கள். திபெத்
தற்பொழுது சீனா வசம் உள்ளது. இப்படி அகதிகளாக வந்த திபெத் மக்கள் தர்மசாலவை தங்கள்
ஆட்சி மையம் ஆக்கிக்கொண்டு இந்தியாவின் மாநிலங்களான இமாசல் பிரதேசம் , அருணாசலம் , கர்நாடக , மகராஷ்ட்ரா
சிக்கிம்களில் தங்கள் முகாம்களை அமைத்துக்கொண்டனர். இந்த ஐம்பத்தி மூன்று ஆண்டுகள்
தங்களுக்கென்று ஒரு நாடு இல்லாமல் நாடோடி வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். நமது அரசாங்கம் கொடுத்த கல் , முள்ளான வறண்ட பூமியை தம் உழைப்பால் நல்ல விளைச்சல் நிலங்களாக மாற்றி , நம் நாட்டுடன் , கலாச்சாரத்துடன் , மக்களுடன் இணைந்து வாழும் மாசற்ற மக்கள் இந்த திபெத்தியர்கள்.
அறுபது லட்சம் ஜூக்கள் ஹிட்லரால் கொல்லப்பட்டு , தமக்கென்று ஒரு பிடி மண் கூட
இல்லாமல் ,
உலகத்தின் எல்லா மூலைகளிலும் அண்டி வாழ்ந்து , 1948இல்
தமக்கென்று
கிடைத்த இஸ்ரேல் என்ற பாலைவனத்தை பெற்று, விரோதிகளாலே சூழற்பட்டிருந்தாலும் ,
தமக்கென்று ஒரு நாட்டை கட்டி , சுயமரியாதையுடனும் வாழும்
ஜூயிஷ் மக்களுக்கு குரல் கொடுத்த பல நாடுகள் , உலகிற்கே “ பெரியண்ணன் ”என்று பெருமை பீத்திக்கொள்ளும் அமெரிக்க ஏன்
திபெத் விஷயத்தில் மௌனம் சாதிக்கிறது. இந்தியா ஏன் கண்மூடிக்கொண்டிருக்கிறது ? சீன ட்ராகன் (Dragon ) கண்டு உலகிற்கு பயமோ ! குறிப்பாக
இந்தியாவிற்க்கு ?
பறவைகள் கடவுள் வாழ்த்து பாடும் நாளை எதிர் நோக்கி மாசற்ற
ஒரு சமுதாயமே காத்துக்கொண்டிருக்கிறது. என்னதான் நாம் அவர்களுக்கு அடைக்கலம்
கொடுத்து
சகல வசதிகளுடனும் , கௌரவத்துடனும் பார்த்து கொண்டாலும் அவர்களின் மண்ணில் புரண்டு விளையாடி , அவர்களின் நதியான ப்ரஹ்மபுத்ராவில் நீந்தும் சுகம் கொடுக்க
முடியுமா ?
இருக்கும் இடத்தில் இருந்தால்தானே எல்லோருக்கும் சுகம்,
நிம்மதி.
அந்த நாள் விரைவில் வர நாம் ஏதாவது செய்யவேண்டுமல்லவா ?
தர்மசால போய் வாருங்கள் அப்போது என் எண்ணத்தை நீங்களும்
ஆமோதிப்பீர்கள்.
( இதை பகிர்ந்துகொள்ளுங்கள்)
.
No comments:
Post a Comment